திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக்கிறைத்த நீர்:  பா. சத்தியமோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெல்லுக்கு இறைத்த நீர்
ஆங்கே புல்லுக்கும்
பொசியுமாம்” என்பது 
தமிழ்த்தாய் ஒளவை  வாக்கு ; ஆம்!

பெரியநலன் கருதி செய்யும் செயல்
நலன்
எளியவர்களுக்கும் கிடைக்கும்
என்பதாம்;
தானே எல்லா  நீரையும்
குடித்துவிடாமல்
புல்லின் மீதும் கருணை
காட்டுகிறது நெல்பயிர்
என்பதாம்;
டம்பளர் அளவு நீர் வேணுமெனில்
கிணற்றில் டம்பளர் கட்டி
இழுப்பதில்லை
வாளி கட்டித்தான்
இறைக்கின்றோம் என்பதாம்;
தேங்காய் அளவு நன்மை
செய்தால்தான்
எலுமிச்சை அளவாவது போய்ச்
சேரும் என்பதாம்;
ஆதலினால் 
பெண் இனத்திற்கு ஆண் செய்யும்
சிறிய நன்மை எவை எவை என ஆராய்ந்து
அவற்றையெல்லாம் பெரிது பெரிதாக
மாற்றும் குணம் பெறுவோம்
அதன்பின்பு 
எதுவுமே விழலுக்கு இறைத்த
நீராகாது
சமூக வெற்றிக்கு விதைத்த
விதையென்றே ஆகுமாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.